மதுரையில் அரசு பள்ளிக்கு யங் இண்டெக் பிரிவு சார்பாக தொல்லியல் புத்தகங்கள் வழங்கப்பட்டது
மதுரை எல்.கே.பி.நகர் அரசு நடுநிலைப் பள்ளி நூலகத்திற்கு தொல்லியல் புத்தகங்கள் வழங்கும் விழா பள்ளி தலைமை ஆசிரியர் தென்னவன் தலைமையில் நடைபெற்றது.,மேலும் இந்நிகழ்வில் ஆசிரியர் ராஜவடிவேல் முன்னிலையிலும் மதுரை யங் இண்டெக் பிரிவு கன்வீனர் ராஜேஷ் கண்ணா பள்ளி நூலகத்திற்கு தேவையான தொல்லியல் புத்தகங்களை வழங்கி குழந்தைகளுடன் உரையாடினார்., குழந்தைகளின் அறிவு மற்றும் தகவல் தொடர்பு திறனை கண்டறிந்து பங்கேற்பாளர்களை பாராட்டினார்.,பள்ளி குழந்தைகளை புத்தகங்களைப் படித்து அவர்கள் மிகவும் விரும்பிய புத்தகத்தின் பகுதியை பற்றிய தங்கள் எண்ணங்களை பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார். மேலும் புத்தகங்கள் வழங்கியமைக்கு மாணவி பாண்டிலட்சுமி நன்றி தெரிவித்தார்..
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
கருத்துகள் இல்லை