Header Ads

  • சற்று முன்

    குத்துச்சண்டைபோட்டியில் மாநில அளவில் பங்கு பெறப் போகும் என்ற மாணவிகளுக்கு திமுக சார்பில் ஊக்க தொகை வழங்கப்பட்டது

    திருமங்கலம் அருகே அரசு உதவி பெறும் பள்ளி மாணவிகள்,  மாநில அளவில் நடைபெறும் ஜூடோ, குத்துச்சண்டை போட்டிக்கு தேர்வு -  திமுக சார்பில் மதுரை தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன் ஊக்கத்தொகை அளித்து கௌரவிப்பு. மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே டி கல்லுப்பட்டியில் உள்ள காந்தி நிகேதன் அரசு உதவி பெறும் பள்ளியில் பயிலும் மாணவிகள், சமிக்ஷா , பூமாரி ஆகிய இருவர் மாநில அளவில் நடைபெறும் விளையாட்டு போட்டியில் ஜூடோ பிரிவு மற்றும் குத்துச்சண்டை பிரிவில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

    அவர்களுக்கு திமுக சார்பில் மதுரை தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன்,  ஊக்க தொகையாக குத்துச்சண்டைபோட்டியில் மாநில அளவில் பங்கு பெறப் போகும் என்ற மாணவி சமிக்ஷா - விற்கு ரூபாய் 30 ஆயிரம் /-, ஜீடோ போட்டியில் பங்குபெறும் மாணவி பூமாரிக்கு பூமாரிக்கு ரூபாய் 10 ஆயிரம்  அளித்தும்,சால்வை அணிவித்தும் கௌரவப்படுத்தினார்.அரசு பள்ளி மாணவிகள்,  இதுபோன்ற தற்காப்புக் கலைகளிலும் முன்னிலை பெற்று வர வேண்டும் என வாழ்த்து தெரிவித்தார்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad