Header Ads

  • சற்று முன்

    டாக்டர் .ஐடா ஸ்கடர் அன்புக்கரங்கள் அறக்கட்டளை அறங்காவலர் பேரா. R.ஆனந்தன் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலி நடைபெற்றது.

    வேலூர் மாவட்டம், வேலூர் சத்துவாச்சாரி சோலை அரங்கத்தில் நடைபெற்ற டாக்டர் .ஐடா ஸ்கடர்  அன்புக்கரங்கள் அறக்கட்டளையின் ஆண்டு விழாவில் அறங்காவலர் பேரா. R.ஆனந்தன் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலி தினத்தை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி தலைவர் G. .தவசீலன் தலைமையில் நடைபெற்றது. 

    இந்நிகழ்ச்சியில் செயலாளர் வி. ராஜேந்திரன் ,வரவேற்புரை ஆற்றினார் .தொழிலதிபர் சோலைநாதன், வீரமாமுனிவர் தமிழ் சங்கம் தலைவர் ஏ . ஆண்ட்ருஸ், சத்துவாச்சாரி சாந்தி நிகேதன் மேல்நிலைப்பள்ளி தலைவர் ஏ. திருநாவுக்கரசு, உதவும் உள்ளங்கள் சந்திரசேகரன்,ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

    ஊரிஸ் கல்லூரி முதல்வர் நெல்சன் வில்வநாதன்R. ஆனந்தன் அவர்களின் படம் திறந்து வைத்து சிறப்புரையாற்றி   நல திட்ட உதவிகள் வழங்கினார். இந்நிகழ்ச்சியில்   டாக்டர் ஐடா ஸ்கடர் அம்மையாருடன் பணிபுரிந்த R.D.சுந்தர்ராஜ் மற்றும் டாக்டர் A.P.J. அப்துல் கலாம் அவர்களுடன் பணிபுரிந்த S. ராமலிங்கம் ஆகியோருக்கு நினைவுப் பரிசு வழங்கி கௌரவித்தனர்.

     வேலூர் மாவட்ட செய்தியாளர் : S. சுதாகர் 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad