ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட வங்கி ஊழியர் சங்கம் சார்பாக 13 -ஆவது மாவட்ட மாநாடு வேலூர் ஆரணி ரோடு செழியன் அரங்கத்தில் நடைபெற்றது.
வேலூர் மாவட்டம், ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட வங்கி ஊழியர் சங்கம் (வேலூர் திருப்பத்தூர் ராணிப்பேட்டை) சார்பாக 13 -ஆவது மாவட்ட மாநாடு வேலூர் ஆரணி ரோடு செழியன் அரங்கத்தில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்கள் டிஎன்பிஇஎஃப் பொதுச் செயலர் இ.அருணாச்சலம்,ஏஐபிஇஏ பொருளாளர் சி .எஸ் .வேணுகோபால், கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். விசிசிபி பொதுச் செயலர் டில்லி பாபு, விசிசிபி எம் .சுந்தரேசன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். உடன் தலைவர் ஜி .ஆறுமுகம், பொருளாளர் எஸ்.சதாசிவம், பொதுச் செயலர் ஜே .மில்டன் மற்றும் வங்கி ஊழியர்கள் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
வேலூர் மாவட்ட செய்தியாளர் : S. சுதாகர்
கருத்துகள் இல்லை