Header Ads

  • சற்று முன்

    மாநில கல்விக்கொள்கை உயர்மட்டக்குழுவினரின் கருத்து கேட்பு கூட்டம் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் காயிதே மில்லத் நினைவு கூட்ட அரங்கில் நடைபெற்றது.

    தமிழ்நாட்டில் மாநிலத்திற்கென தனித்துவமானமாநில கல்விக்கொள்கை வகுப்பதற்காக மாண்புமிகு நீதியரசர் திரு.த.முருகேசன் (புதுதில்லி உயர்நீதிமன்றம் முன்னாள் தலைமை நீதியரசர்) அவர்கள் தலைமையில் ஓர் உயர்மட்டக்ழு தமிழ்நாடு அரசால் அமைக்கப்பட்டுள்ளது.  

    மாநில கல்விக்கொள்கை உயர்மட்டக்குழுவினரின் கருத்து கேட்பு கூட்டம் வேலூர் மண்டலத்தில் இடம் பெறும் வேலூர், இராணிப்பேட்டை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களிலுள்ள கல்வியாளர்கள் தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்கள், ஆசிரியர்கள், ஓய்வு பெற்ற ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் ஆகியோரில் தேர்வு செய்யப்பட்டுள்ளவர்களிடம் கருத்துக் கேட்புக் கூட்டம் 

    வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் காயிதே மில்லத் நினைவு கூட்ட அரங்கில் நடைபெற்றது.  இந்த கருத்து கேட்பு கூட்டத்திற்கு வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பெ.குமாரவேல் பாண்டியன், இ.ஆ.ப., அவர்கள் வரவேற்று பேசினார்.  மாண்புமிகு நீதியரசர் திரு.த.முருகேசன் (புதுதில்லி உயர்நீதிமன்றம் முன்னாள் தலைமை நீதியரசர்) அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

    செய்தியாளர் : S.சுதாகர் 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad