Header Ads

  • சற்று முன்

    சோழவந்தான் அருகே அரசு பேருந்து விபத்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்

    மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து குருவித்துறை சென்ற அரசு பேருந்து குருவித்துறை சென்று திரும்பி நிலையில் மன்னாடிமங்கலம் அடுத்து  எதிரே வந்த வண்டிக்கு வழிவிட முயன்ற  நிலையில் ரோட்டில் ஓரமாக இருந்த சகதியில்  திடீரென இறங்கியது இதனால் பேருந்தில் இருந்த பயணிகள் அனைவரும் அங்கம் இங்கும் ஓடினார் உடனடியாக சுதாறித்த ஓட்டுனர்  பிரேக் பிடித்து பேருந்தை நிறுத்தினார் உடனே பஸ்ஸில் இருந்த அனைவரும் பத்திரமாக கீழே இறங்கி விடப்பட்டு மாற்று பேருந்து வரவழைத்து அதில் ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டனர் இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது மழைக்காலங்களில் சாலையின் இருபுறங்களும் மழை நீரால் சேரும் சகதியமாக இருக்கும் நிலையில் பேருந்து ஓட்டுநர்கள் கவனமாக ஓட்ட வேண்டும் என்று அங்கிருந்த பொதுமக்கள் தெரிவித்தனர்.

    செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad