Header Ads

  • சற்று முன்

    மதுரையில்சாக்கு பையை போர்த்திகொண்டு போதையில் இரு சக்கர வாகனத்தை திருடி செல்லும் நூதன திருடர்கள்: சிசிடிவி காட்சி வெளியீடு*

    மதுரை மேல அனுப்பானடி ஹவுசிங் போர்டு பகுதியை சேர்ந்தவர் திருப்பதி. இவர் அதே பகுதியில் பலசரக்கு கடை வைத்து தொழில் செய்து வருகிறார்.



    இந்தநிலையில் நேற்று இரவு தனது வீட்டின் முன்பாக இரு சக்கர வாகனத்தை நிறுத்திவைத்துவிட்டு தூங்க சென்றவர் காலையில் எழுந்து பார்த்தபோது டூவீலர் காணாமல் போனது கண்டு அதிர்ச்சியடைந்தார்.

    உடனே கீரைத்துறை காவல்நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் போலீசார் திருப்பதியின் வீட்டின் அருகே வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமிராவில்  பதிவான காட்சிகளை கைப்பற்றி விசாரணையை துவக்கினர்.

    அந்த CCTV காட்சியில் சாக்குப்பையை போர்த்திகொண்டு  இருவர் மதுபோதையில் தள்ளாடியபடி  திருப்பதியின் இரு சக்கர வாகனத்தை திருடி செல்லும் காட்சி பதிவாகியுள்ளளது.  அந்த காட்சிகளின் அடிப்படையில் திருடர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

    மளிகை கடை வியாபாரியின் டூவீலரை சாக்கு பையால் தன்னை மறைத்து நூதன முறையில் திருடிசென்ற சிசிடிவி காட்சி வெளியாகி தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

    அந்தப் பகுதியில் இதுபோன்று அடிக்கடி வீட்டின் வெளியே நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கும் டூவீலர்கள் திருட்டு போவதை தடுத்து நிறுத்த போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர்.

    செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad