Header Ads

  • சற்று முன்

    கோவில்பட்டி அருகே பூட்டிய வீட்டில் இறந்த நிலையில் ஆண் சடலத்தை விளாத்திகுளம் போலீசார் மீட்டுள்ளனர்.....‌

    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே விளாத்திகுளம் உள்ள காமராஜா் நகர் 2-வது தெருவை சேர்ந்தவர் கார்த்திகேயன் (45) தந்தை கந்தசாமி,தாய் வைஜெயந்திமாலா இருவரும் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டனர்.தனது பெற்றோர்கள் இறந்ததில் இருந்து கார்த்திகேயன் திருமணம் செய்து கொள்ளாமல் அக்கம் பக்கத்தினரிடமும் தனது உறவினர் என யாரிடமும் எந்த தொடர்பும் வைத்துக் கொள்ளாமல் தனக்கு தேவையான உணவை தானே சமைத்துக் கொண்டு தனியாக காமராஜர் நகரில் உள்ள தனது வீட்டில் வசித்து வந்துள்ளார். எப்போதும் வீட்டை பூட்டி விட்டு தனிமையிலேயே வசித்து வந்துள்ளார்.உணவுப் பொருட்கள் வாங்குவதற்கும் குடிநீர் எடுப்பதற்காக மட்டுமே வீட்டை விட்டு வெளியே வந்து சொல்வதை வழக்கமாகக் கொண்டு இருந்து வந்துள்ளார்.கடந்த 10 நாட்களாக கார்த்திகேயன் வீடு பூட்டிய நிலையிலே கிடந்துள்ளது. இந்நிலையில்  மாலை கார்த்திகேயன் தங்கி இருந்த வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசத் தொடங்கியுள்ளது‌. இதனை அடுத்து சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் விளாத்திகுளம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். இன்ஸ்பெக்டர் இளவரசு தலைமையில் சம்பவ இடத்திற்கு வந்த விளாத்திகுளம் போலீசார் கதவை உடைத்து பார்க்கையில் கார்த்திகேயன் இறந்து தோல்கள் உறிந்து உடல்கள் ஊதிய நிலையில் இறந்து கிடந்துள்ளார்.இதனைத் தொடர்ந்து கார்த்திகேயன் உடலை பிரேத பரிசோதனைக்காக விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad