Header Ads

  • சற்று முன்

    மதுரை மாவட்டம் பரவை பேரூராட்சியில் திறந்தவெளியில் குப்பைகளை கொட்டுவதால் தொற்று நோய் பரவும் அபாயம்

    மதுரை மாவட்டம் பரவை பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன இங்கே பேரூராட்சி துப்புரவு பணியாளர்களால் அள்ளப்படும் குப்பை திறந்தவெளியில் கொட்டப்படுகிறது

    இதனால் சுகாதார கேடு ஏற்படுவதாகவும் இதுகுறித்து அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் பரவை பேரூராட்சிக்கு புதிதாக குப்பை வண்டிகள் வாங்கியும் அதை உபயோகப்படுத்தாமல் பேரூராட்சி வளாகத்திலேயே வைத்திருப்பதாகவும் குற்றம் சாட்டுகின்றனர்.

    மேலும் பரவை பேரூராட்சி முழுவதும் ஆங்காங்கே குப்பைகள் கொட்டப்பட்டு குப்பை குளமாக காட்சி அளிக்கிறது. குறிப்பாக மதுரை திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில்  ரோட்டோரங்களில் இருபுறமும் குப்பைகள் கொட்டப்படுவதால் பரவையை தாண்டி செல்லும் வாகனங்களில்  செல்பவர்கள் மூக்கை பிடித்துக் கொண்டு செல்லும் அவல நிலை உள்ளதாக கூறுகின்றனர்

    மேலும் கோழி ஆட்டு இறைச்சி ஆகியவற்றின் கழிவுகளை ரோட்டோரங்களில் கொட்டுவதால் அவற்றை நாய்கள் இழுத்து ரோட்டில் விட்டு செல்கின்றன இதனால் மிகப்பெரிய சுகாதார கேடு நிலவி வருகிறது.  பேரூராட்சி விரிவாக்க பகுதியில் உள்ள குப்பை கிடங்கு திறந்த வெளியில் குப்பைகளை கொட்டுவதால் அதலை பொதும்பு சிறுவாலை போன்ற கிராமங்களுக்கு செல்லும் வழியில் சிறந்த வழியில் குப்பைகளை கொட்டுவதால் மிகப்பெரிய அளவில் சுகாதாரகேடு ஏற்பட வாய்ப்புள்ளதாக இந்த பகுதி பொதுமக்கள் அச்சத்துடன் தெரிவிக்கின்றனர்

    மேலும்ரோட்டில் கொட்டப்படும் குப்பைகளில் இருந்து வரும் நீர் குடிநீர் ஆதாரங்களுடன் கலந்து பொதுமக்களின் ஆரோக்கியத்திற்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது. இது அனைத்திற்கும் பேரூராட்சி நிர்வாகத்தின் மெத்தன போக்கே காரணம் என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்  ஆகையால் மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு பரவை பேரூராட்சியில் நிலவி வரும் சுகாதாரகேட்டை தடுத்து பொதுமக்களை நோய் தொற்றிலிருந்து காப்பாற்ற வேண்டும் என கோரிக்கை வைக்கின்றனர்..

    செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad