Header Ads

  • சற்று முன்

    பசுந்தோல் போத்திய புலியாக வெளிவந்த அரசாணை 115யை தடுத்து நிறுத்தி இளைஞர்களை காத்தவர் எடப்பாடியார்

    மூணரை லட்சம் பேர்களுக்கு அரசு வேலைவாய்ப்பு வழங்குவோம் என்று திமுக அளித்த 187வது தேர்தல் வாக்குறுதி கிணற்றில் போட்ட கல்லாக உள்ளது சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர்  ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

    திமுகவின் தேர்தல் வாக்குறுதிகளை சுட்டிக்காட்டி தினந்தோறும் ஆளுகிற அரசுக்கு எதிர்க்கட்சித் தலைவரும், முன்னாள் முதலமைச்சர் எடப்பாடியார் தொடர்ந்து நினைவு படுத்தி வலியுறுத்தி வந்தாலும் கூட, தேர்தல் வாக்குறுதிகள் இன்றைக்கு கிணத்திலே போட்ட கல்லாக காட்சி அளிப்பதை நாம் பார்க்கின்றோம். 

    குறிப்பாக திமுகவின் தேர்தல் அறிக்கையில் ஐந்தரை லட்சம் வேலை வாய்ப்புகள் வழங்கப்படும் என்று கூறினார்கள். குறிப்பாக தமிழகம் முழுவதும் உள்ள மூணரை லட்சம் அரசு வேலை வாய்ப்புகளுக்கு இளைஞர்கள் நியமிக்கப்படுவார்கள் என்கிற திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய தேர்தல் வாக்குறுதி எண் 187 யில்கூறப்பட்டன.மேலும்   புதிதாக ஏறத்தாழ 2 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்றும் மொத்தம் ஐந்தரை லட்சம் வேலைவாய்ப்புகள் இளைஞர்களுக்கு வழங்கப்படும் என்று பொய்யான வாக்குறுதிகளை கொடுத்தனர். இன்னைக்கு வாக்குறுதிகள் கிணற்றிலே போட்ட கல்லாக உள்ளது. இன்றைக்கு சமூக நீதிக்கு ஒரு பேராபத்து வரக்கூடிய ஒரு நிலையில் தமிழகத்திலே இன்றைக்கு 69% இட ஒதுக்கீடுக்கு பேராபத்து வரக்கூடிய அரசாணை எண் 115 யை முதல் முதலாக சட்டமன்ற எதிர் கட்சி தலைவர், முன்னாள் முதலமைச்சர் எடப்பாடியார் தமிழ்நாட்டிலே முதல் உரிமைக்குரலாக அரசாங்க எண் 115 ரத்து செய்ய வேண்டும், பாடுபட்டு கல்வி பயின்று கனவு நினைவாகிற வகையில் வாழ்நாளெல்லாம் தன் அர்ப்பணிப்பு உணர்வோடு கல்வியறிவு பெற்று எப்படியாவது தன் குடும்பத்தில் ஒரு அரசு பணியை பெற்றுவிட வேண்டும் என்று இளைஞர்களுடைய கனவை தெரிவித்து கடுமையான குற்றச்சாட்டுகளை எடுத்து வைத்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தியதோடு மட்டுமல்லாமல், இதனுடைய பேராபத்தை இளைஞர்களுக்கு எடுத்துச் சொல்வதோடு இந்த அரசினுடைய நடவடிக்கைக்கு சுட்டிக்காட்டினார். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம், ஆசிரியர் தேர்வாணையும், காவலர் தேர்வு வாரியம் போன்ற அரசு இந்த தேர்வாணையங்கள் மூலமாக தான் நாம் இளைஞர்களை தேர்வு செய்து ஆட்களை தேர்வு செய்து நாம் அரசு பணியிலே நியமிக்கின்றோம். ஆனால் இந்த ஆள்சேர்ப்பு நடவடிக்கையை தனியார் ஆள்சேர்ப்பு நிறுவனங்களை பயன்படுத்துவதற்கு முடிவு செய்திருப்பது இந்த அரசாணை எண் 115யின் சாராம்சமாகும்.  

    கடந்த மார்ச் மாதம் தாக்கல் செய்யப்பட்ட தமிழகத்தினுடைய நிதிநிலை அறிக்கையிலே நிதி அமைச்சர் தெரிவித்திருந்தையொட்டி ஓய்வு பெற்ற இந்திய ஆட்சி பணி அதிகாரிகள்  ஐவர் அடங்கிய மனிதவள சீர்திருத்த குழுவை 18.10. 2022-ம் தேதியிட்ட 115 எண் கொண்ட அரசாணை மூலம் தமிழக அரசு இந்த குழுவை அமைத்துள்ளது.

    அரசு ஊழியர்களின் பணித்திறனை மேம்படுத்தவும், அந்த நோக்கத்துடன் அரசு ஊழியர்களுக்கு அளிக்கப்படும் பயிற்சி முறையிலே மாற்றங்களை மேம்படுத்துவோம் என்று சொல்வது அது மேல்போக்கான வார்த்தைகளாக இருக்கிறது இந்த 115 அரசாணை பசுதோல் போர்த்திய புலியாகும். பார்ப்பதற்கு பசுவாகவும் ஆனால புலியாக இருக்கக்கூடிய அந்த வாய்ப்பை தான் நாம் பார்க்கிறோம். 

    ஆள் தேர்வு முறையிலேயே செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ள மாற்றங்களை மறைமுகமாக இதில் திணித்து தனியாரை உள்ளே நுழைப்பதன் மூலமாக சமூக நீதி கேள்விக்குறியாகி இருக்கிறது பணியாளர்களை நியமனம் செய்தல் தனியார் நிறுவனங்கள்கள் மூலம் சி மற்றும் டி பிரிவு பணிகளுக்கு குத்தகை முறையிலேயே பணியாளர்களை பெறுதல் சில பணிகளுக்கு நேரடியாக நிரந்தர பணியாளர்களின் நியமிக்காமல் முதலிலே தற்கால பணியாளர்களாக நியமித்து தற்காலிக பணியாளர்களை பின்னால் அவர்களின் செயல்பாடுகளை ஆய்வு செய்து பணி நியமனம் வழங்குதல் ஆகிய திட்டங்களை இது உள்ளடக்கியதாக இந்த அரசாணை 115யில் இருக்கிறது இதை ஆறு மாத காலத்திலே இந்த சீர்திருத்த குழு அரசிடம் அறிக்கை சமர்ப்பித்து  நடைமுறைப்படுத்தபட்டால் இளைய சமுதாயத்தின் எதிர்காலம் இருளிலே மூழ்கும் இளைய சமுதாயத்தின் அரசு பணி என்கிற கனவு காணாமல் போகும், இனி அரசு பணியாளர் என்கிற ஒரு நிலையை தமிழ்நாட்டில் இல்லை என்கிற ஒரு நிலை உருவாகிற ஒரு பேர்ஆபத்து இளைய சமுதாயத்தை சூழ்ந்து இருக்கிறது. 

    இளைய சமுதாயத்தை விழித்துக் கொள்வதற்காக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடியார் இளைஞர்கள் எதிர்காலத்திற்காக, நன்மைக்காக,  பாதுகாப்புக்காக உரிமைகுரல் கொடுத்தார்  இந்த ஆய்வு வரம்புகள் ரத்து செய்யப்பட்டு புதிதாக வெளியிடப்படும் அரசு அறிவித்திருப்பது  எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடியார் எடுத்துட்ட அந்த முயற்சி கிடைத்த வெற்றி . இன்றைக்கு இளைய சமுதாயம் எடப்பாடியாருக்கு சமுதாயத்தின் சார்பிலே கோடான கோடி நன்றியை  தெரிவித்து வருகின்றனர்.

    பசுந்தோல் போத்திய புலியாக வெளிவந்த அரசாணை 115யை தடுத்து நிறுத்தி இளைஞர்களை காத்தவர் எடப்பாடியார் என்று கூறினார்.

    செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad