அவனியாபுரம் பால மீனாம்பிகை கல்யாணசுந்தரேஸ்வரர் கோயிலில் கார்த்திகை சோமவார சங்காபிஷேகம் நடைபெற்றது.
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே அவனியாபுரம் பாலமீனாம்பிகை - கல்யாண சுந்தரேஸ்வரர் கோயில் உள்ளது. பாண்டிய மன்னர் மலையத்துவ ராஜன் மகளாக மீனாட்சி அவதரித்து. குழந்தை பருவத்தில் விளையாடிய திருக்கோயில். மதுரை மீட்சியம்மன கோயிலில் நடைபெறும் சித்திரை திருவிழா போன்று அவனியாபுரத்தில் உள்ள பாலமீனாம்பிகை கோயிலிலும் திருவிழா நடைபெறும். புராதான பாலமீனாம்பிகை - கல்யாணசுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் கார்த்திதை சோமா வர (திங்கள் கிழமை) சங்காபிஷேகத்தை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
கருத்துகள் இல்லை