Header Ads

  • சற்று முன்

    வேலூர் பழைய பேருந்து நிலையம் ஏ ஐ டி யு சி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    வேலூர் மாவட்டம், வேலூர் பழைய பேருந்து நிலையம்  மண்டி தெருவில் வேலூர் மாவட்டம் ஏ ஐ டி யு சி ஆட்டோ தொழிலாளர்கள் சங்கம் சார்பாக  ராணிப்பேட்டை, கன்னிகாபுரம் சிஎம்சி மருத்துவமனைக்கு சி.எம்.சி .நிர்வாகித்தால் இயக்கப்படும் தனியார் பேருந்துகளின் நியமனத்தை மாற்றி நோயாளிகளை அழைத்துச் செல்ல ஆட்டோக்களுக்கு அனுமதி வழங்க கோரி ஆட்டோ சங்கம் மாவட்ட பொதுச் செயலாளர் சீ. அ.சிம்பு தேவன் தலைமையில்  கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆட்டோ சங்கம் மாவட்ட தலைவர் வி .ஆல்வின், மாவட்ட பொருளாளர் எ .ஏழுமலை, மாவட்ட துணை செயலாளர் ஏ .மாணிக்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் ஏ ஐ டி யு சி மாநிலத் துணைத் தலைவர், மாவட்ட பொதுச் செயலாளர் எஸ் .ஆர். தேவதாஸ் சிறப்புரையாற்றினார்  உடன் வேலூர் மாவட்ட ஏ ஐ  டி யு சி ஆட்டோ தொழிலாளர்கள் சங்கம் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    வேலூர் மாவட்ட செய்தியாளர் : S. சுதாகர் 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad