Header Ads

  • சற்று முன்

    வேலூர் கிரீன் சர்க்கிள் ,அண்ணாமலையார் ரெசிடென்சியில் பாட்டாளி மக்கள் கட்சி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

    வேலூர் மாவட்டம் , வேலூர் கிரீன் சர்க்கிள் ,அண்ணாமலையார் ரெசிடென்சியில் பாட்டாளி மக்கள்  கட்சி மாவட்ட மகளிர் சங்கம் ,இளம் பெண்கள் சங்கம், அன்புமணி தங்கைகள் படை பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட பொறுப்பாளர் எம் .மஞ்சுளா தலைமையில் நடைபெற்றது. மாவட்ட மகளிர் சங்கத் தலைவர் ஜே. சுகன்யாவரவேற்பு உரையாற்றினார்.53-வது வார்டு மாமன்ற உறுப்பினர் எம். பாபி கதிரவன், மாவட்ட  மகளிர் சங்க செயலாளர் ஏ.மலர்கொடி, மாவட்ட இளம் பெண்கள் சங்க செயலாளர் பி .நித்யா, மாவட்ட இளம் பெண்கள் சங்கத் தலைவர் சி.ரம்யா, மாவட்ட அன்புமணி தங்கைகள் படை தலைவர் ஆர். சுமதி, மாவட்ட அன்புமணி தங்கைகள் படை செயலாளர் சத்யா, ஆகியோர் முன்னிலை வகித்தனர். மகளிர் சங்கம்  மாநிலச் செயலாளர்,   சக்தி  கமலம்மாள், மாநில தலைவர் நிர்மலா ராஜா, மாநில செயலாளர் ம.வரலட்சுமி மாநில துணைத் தலைவர் என். டி .சண்முகம், வேலூர் கிழக்கு மாவட்ட செயலாளர் கே. எல். இளவழகன், வேலூர் கிழக்கு மாவட்ட தலைவர் பி .கே .வெங்கடேசன், ஆகியோர் சிறப்புரையாற்றினர். இந்நிகழ்ச்சியில் மாவட்டத் துணை தலைவர் ஆர் .பி .சம்பத் , மாவட்ட இளைஞரணி செயலாளர் ப.ஜெகன், மாவட்ட சமூக ஊடகப் பேரவை தலைவர் எஸ். தேவா மற்றும் ,வேலூர் கிழக்கு மாவட்டம் பாட்டாளி மக்கள் கட்சியினர், நிர்வாகிகள் ,பலர் கலந்து கொண்டனர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad