Header Ads

  • சற்று முன்

    திராவிட இயக்கத்தின் வழி வந்தவர்கள் என சொல்லிக் கொள்ளும் அதிமுக வெட்கி தலை குனிய வேண்டும் -

    மாநில சுய ஆட்சிக்கும் தமிழ் நாட்டின் உரிமைகளுக்கும் எதிராக செயல்படக்கூடிய ஆளுநரை சிறப்பாக செயல்படுகிறார் என்று சொல்லக்கூடிய அளவிற்கு உங்களுக்கு சுயமரியாதை இல்லாமல் போய்விட்டதே என்று நாங்கள்தான் உங்களை நினைத்து வருத்தப்படுகிறோம் கோவில்பட்டியில் நடைபெற்ற செயல்வீரர்கள் கூட்டத்தில் கனிமொழி எம்பி  பேச்சு....

    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மத்திய ஒன்றியம் சார்பில் நடைபெற்று வரும் திமுக செயல் வீரர்கள் கூட்டம் தனியார் திருமண மஹால் வைத்து நடைபெற்றது கூட்டத்திற்கு  திமுக துணை பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி எம்பி அமைச்சர் கீதா ஜீவன் நகர் மன்ற தலைவர் கருணாநிதி உள்ளிட்டோர் பங்கேற்றனர் நிகழ்வில் பேசிய கனிமொழி. திராவிட இயக்கத்தின் வழி வந்தவர்கள் என சொல்லிக் கொள்ளும் அதிமுக வெட்கி தலை குனிய வேண்டும்.



    தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டங்களை கவர்னருக்கு அனுப்பி வைத்தால் அவர் அதில் கையெழுத்திடாமல் வைத்திருக்கக் கூடிய ஒரு கவர்னர். ஒரு அரசாங்கம் மக்களால் தேர்ந்தெடுக்கப்படக்கூடிய அந்தப் பிரதிநிதிகள் சட்டங்கள் தீர்மானங்கள் நிறைவேற்றுகிறார்கள் அதை ஏற்றுக்கொள்ள வேண்டும் கையெழுத்திடாமல் ஒப்புதல் அளிக்காமல் கவர்ணரே வைத்துக் கொண்டுள்ளார் அவரை சிறப்பாக செயல்படுகிறார் என்று எடப்பாடி பழனிச்சாமி கூறுகிறார்

    மாநில சுய ஆட்சிக்கு தமிழ் நாட்டின் உரிமைகளுக்கு எதிராக செயல்படக்கூடிய ஆளுநரை சிறப்பாக செயல்படுகிறார் என்று சொல்லக்கூடிய அளவிற்கு உங்களுக்கு சுயமரியாதை இல்லாமல் போய்விட்டதே இன்று நாங்கள்தான் உங்களை நினைத்து வருத்தப்படுகிறோம். பாஜகவிடம் முன்னாடியே  அடிமை சாசனத்தை  எழுதிக் கொடுத்து விட்டனர் அதிமுகவினர் அவர்கள் மீண்டு  வருவதற்கு தயாராகவும் இல்லை வாய்ப்பு இல்லை. தமிழ்நாட்டில் நம் அடிப்படைக் கொள்கைக்கு எதிராக இருக்கக்கூடிய பாஜக தமிழகத்தில் காலூன்றவே முடியாது.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad