Header Ads

  • சற்று முன்

    மதுரையில் 2 வயது சிறுமி விளையாடிக் கொண்டிருந்த பொழுது சட்டிக்குள் தலை மாட்டிக் கொண்டது துணிகரமாக செயல்பட்டு தீயணைப்பு துறையினர் தலையினை மீட்டனர்

    மதுரை மணி நகரத்தை சேர்ந்த குழந்தையின்  அஸ்வினி(2) மணி நகர் முதல் தெரு. 2 வயது சிறுமி தன் இல்லத்தில் விளையாடிக் கொண்டிருந்த பொழுது எதிர்பாராத விதமாக சட்டிக்குள் தலை மாட்டிக் கொண்டது. உடனடியாக அதிர்ந்ததுபோன பெற்றோர் அக்கம்பக்கத்தினர் உதவியோடு குழந்தையை மீட்பதற்கு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர் இருப்பினும் கூட முயற்சிகள் பலனளிக்கவில்லை. 

    மதுரை தீயணைப்பு துறை அலுவலகத்திற்கு குழந்தையை அழைத்துச் சென்றவுடன் அங்கே இருந்த தீயணைப்புத் துறையினர் சிறிய கத்திரிக்கோலை  கொண்டு குழந்தையின் தலையில் மாட்டிக் கொண்ட சண்டியை வெட்டி பத்திரமாக மீட்டு எடுத்தனர்.கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்தில் குழந்தையை மீட்டெடுத்ததால் குழந்தைக்கு எந்தவித உடல் நல குறைவும் ஏற்படவில்லை.

    பெற்றோர்கள் மன மகிழ்ச்சியோடு தீயணைப்பு வீரர்களுக்கு நன்றி கூறி விடைபெற்றனர். அதே சமயம் வீட்டில் விளையாடும் குழந்தைகளை எச்சரிக்கையோடு பார்த்துக் கொள்ள வேண்டும் எனவும் தீயணைப்பு துறையினர் வேண்டுகோள் வைத்தனர்

    .செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad