கோவில்பட்டி அருகே மின்னல் தாக்கி உயிரிழந்த குடும்பத்திற்கு 4 லட்சம் நிவாரணம் - .
கோவில்பட்டி அருகே மின்னல் தாக்கி உயிரிழந்த குடும்பத்திற்கு 4 லட்சம் நிவாரணம் - அமைச்சர் கீதா ஜீவன் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் வழங்கினர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே விளாத்திகுளம் உள்ள மார்த்தாண்டம்பட்டி கிராமத்தை சேர்ந்த மாரியப்பன் என்பவரது மனைவி மாலதி (47) கடந்த சில தினங்களுக்கு முன்பு விவசாயப் பணியை முடித்துவிட்டு -மார்த்தாண்டம்பட்டி கிராமத்திற்கு இடையே பாலத்தின் அருகே நடந்து வந்து கொண்டிருந்தனர்.அப்போது திடீரென பலத்த சத்தத்துடன் மின்னல் தாக்கியது.இதில் மாலதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் இச்சம்பவம் அறிந்து சட்டமன்ற உறுப்பினர் நேரடியாக அவரது இல்லத்திற்கு குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினார் மேலும் தமிழக அரசின் பேரிடர் நிவாரண நிதியிலிருந்து உயிரிழந்த குடும்பத்திற்கு நிவாரணம் அளிக்கப்படும் என்று உறுதியளித்திருந்தார் இந்நிலையில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் மற்றும் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன் மாவட்ட ஆட்சித் தலைவர் செந்தில்ராஜ் உள்ளிட்டோர் அவரது இல்லத்திற்கு நேரில் சென்று உயிரிழந்த மாலதி குடும்பத்திற்கு ஆறுதல் கூறினர் மேலும் தமிழக அரசின் நிவாரண நிதி 4 லட்ச ரூபாய்க்கான காசோலை யை வழங்கினர் குடும்பத்தார் தரப்பிலும் தனது மகள்களுக்கு அரசு வேலை வழங்கிட கோரியில் கோரிக்கை விடுத்தனர்.உயிரிழந்த மாலதிக்கு தங்கப்பிரகாஷ்(24) என்ற மகனும் தங்கமாரி(22) கன்னிகா(18) என்ற இரண்டு மகள்களும் உள்ளனர். என்பது குறிப்பிடத்தக்கது ..
கருத்துகள் இல்லை