கோவில்பட்டி அருகே சூறைக்காற்றால் சேதம் அடைந்த மக்காச்சோளம் பயிர்கள் சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ ஆய்வு
கோவில்பட்டி அருகே சூறைக்காற்றால் சேதம் அடைந்த மக்காச்சோளம் பயிர்கள் முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ ஆய்வு - பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உடனடியாக இழப்பீடு வழங்க கோரிக்கை..
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வில்லிசேரி பகுதியில் பயிரிடப்பட்டிருந்த மக்காச்சோளம் பயிர்கள் மற்றும் பருத்தி சூறைக்காற்றால் சேதம் அடைந்தன பாதிப்பு அடைந்த விளை நிலங்களை முன்னாள் அமைச்சரும் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜூ ஆய்வு செய்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஆறுதல் கூறினார்.அவருடன் வட்டாட்சியர் சுசீலா, வேளாண்மை துறை இணை இயக்குனர் முகைதீன்,வேளாண்மை துறை நேர்முக உதவியாளர் நாச்சியார் அம்மாள்,வேளாண்மை அலுவலர் காயத்ரி, வேளாண்மை உதவி இயக்குனர் நாகராஜ், வேளாண்மை உதவி அலுவலர் செல்வராஜ், வில்லிச்சேரி தலைவர் வேலன்,துணைத் தலைவர் காசிராஜன்,முன்னாள் ஒன்றிய செயலாளர் போடு சாமி,ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் கிருபாகரன்,மற்றும் நகர் மன்ற உறுப்பினர் கவியரசன்,பழனி குமார், கோபி,முருகன்,உள்பட பலரும் உடன் இருந்தனர்.
கருத்துகள் இல்லை