அருப்புக்கோட்டை அருகே இளம்பெண் மாயம்.....
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகேயுள்ள இலங்கிப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன் (36). இவரது மனைவி வெற்றிச்செல்வி (31). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். கண்ணன், அருப்புக்கோட்டையில் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் கணவன், மனைவிக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. நேற்று கண்ணன் வேலைக்குச் சென்று விட்டு வீட்டுக்கு திரும்பி வந்த போது, குழந்தைகள் மட்டும் வீட்டில் இருந்துள்ளனர். வெற்றிச்செல்வி காணாமல் போயிருந்தார். அவரை பல இடங்களில் தேடிப்பார்த்தும் எந்த தகவலும் கிடைக்கவில்லை. இது குறித்து கண்ணன், திருச்சுழி காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். வழக்குபதிவு செய்த போலீசார், காணாமல் போன இளம்பெண்ணை தேடி வருகின்றனர்.
செய்தியாளர் வி காளமேகம்
கருத்துகள் இல்லை