Header Ads

  • சற்று முன்

    திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் சூரசம்கார விழாவினை ஒட்டி ஐந்தாம் நாளான இன்று சக்திவேல் வாங்கும் விழா நடைபெற்றது

    திருக்கோயில் ஆலய பணியாளர் மண்டபத்தில் கோவர்தன அம்பிகையிடமிருந்து முருகபெருமான் சக்திவேலை வாங்கும் விழா நடைபெற்றது. திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் கடந்த 25- ந்தேதி காப்பு கட்டுதலுடன் கந்த சஷ்டி திருவிழா தொடங்கியது.

    கந்த சஷ்டி திருவிழாவின் ஐந்தாம் நாளான இன்று மாலை 6.30 மணியளவில் முருகப்பெருமான் தன் தாயார் கோவர்த்தனாம்பிகையிடம் சக்திவேல் பெற்று (முருகப்பெருமானின் பிரதிநிதி) சகல பரிவாரங்களுடன் நந்தி வலம் வந்து சமர்ப்பிப்பார். முன்னதாக ஆலயப் பணியாளர் திருக்கண் மண்டபத்தில் சத்தியகீரஸ்வர், முருகப்பெருமான் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். இதனை தொடர்ந்து கந்தசஷ்டி விழாவின்  முக்கிய நிகழ்வான சூர சம்ஹார லீலை சொக்கநாதர் மண்டபத்தில் நாளை மாலை 6.30 அளவில் நடைபெறும்.

    செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad