கோவில்பட்டி அருகே சமுதாய வளைகாப்பு -சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன் பங்கேற்று கர்ப்பிணி தாய்மார்களுக்கு சீதனப் பொருட்களை வழங்கினார்
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே விளாத்திகுளம், மற்றும் புதூர் பகுதிகளில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம் சார்பில் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி தனியார் திருமண மஹாலில் வைத்து நடைபெற்றது இந்நிகழ்வில் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் கலந்து கொண்டு 350 கர்ப்பிணி தாய்மார்களுக்காக சீதனப் பொருட்களான தட்டு புடவை வளையல் பூ மஞ்சள் குங்குமம் வழங்கினார் ..இந்நிகழ்வில் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் தாஜுன்னிசா பேகம் மாவட்ட திட்ட அலுவலர் சரஸ்வதி பேரூராட்சித் தலைவர் அய்யன் ராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை