Header Ads

  • சற்று முன்

    மதுரை செங்கோட்டை பயணிகள் ரயில் மயிலாடுதுறை.வரை நீடிப்பு சோழவந்தானில் நின்று செல்ல. பொதுமக்கள் சார்பில்.கோரிக்கை

    தெற்கு ரயில்வே மதுரை கோட்ட செய்தி அறிவிப்பில்.குறிப்பிட்டுள்ள செங்கோட்டை~மதுரை ரயில்.மயிலாடுதுறை வரை நீடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது ஆனால் இந்த ரயில் சோழவந்தான் ரயில் நிலையத்தில் நின்று செல்லாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது மிகுந்த மன வருத்தத்தை அளிப்பதாக சோழவந்தான் பகுதி பொதுமக்கள்  தெரிவிக்கின்றனர்.   ரயில்வே துரையினர்.ஏன்.சோழவந்தானை புறக்கனிக்கிறார்கள்.என தெரியவில்லை இனிமேலாவது எந்த ஒரு வசதி,முன்னேற்ற திட்டமிடலிலும் சோழவந்தான்ரயில்நிலையமும்சுற்றுவட்டார 25க்கும்மேற்பட்ட கிராம மக்களும்.பயனடைய மனதில்.கொள்ள வேண்டும்

    இப்போது அறிவித்துள்ள வண்டி எண்:16847-48 சோழவந்தானிலும்.நின்று செல்லும்என்றுஉடனடியாக அறிவிக்க வேண்டும் என்றும் இதற்கு தேனி நாடாளுமன்ற உறுப்பினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சோழவந்தான் சுற்று கிராம பொது ரயில் பயணிகள் சங்கம் சார்பில் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad