Header Ads

  • சற்று முன்

    மதுரையில் எதிரெதிரே வந்த இருசக்கர வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில் போக்குவரத்து ஊழியர் படுகாயம்*

    மதுரை பைபாஸ் சாலையில் பழகானந்தத்தில் இருந்து எல்லிஸ் நகர் பகுதியை இணைக்கும் மேம்பாலத்தில் இருசக்கர வந்து கொண்டிருந்த போக்குவரத்து ஊழியர் ஆனந்தன் என்பவர் மீது எதிர்புறம் இருசக்கர அதிவேகமாக வந்த அழகப்பன் நகர் பகுதியை சேர்ந்த வாலிபர் கிஷோர் மோதி விபத்து ஏற்ப்பட்டது. இதில் இருவருக்கும் காலில் பலத்த காயம் ஏற்பட்டத்தை தொடர்ந்து சக வாகன ஓட்டிகள் இருவரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து மிகக் குறுகலான மேம்பாலமாக திகழும் பைபாஸ் மேம்பாலர் கடந்த மூன்று தினங்களில் சுமார் பத்துக்கும் மேற்பட்டோர் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்து ஒருவர் பலியாகிய சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போக்குவரத்து துறை நடவடிக்கை மேற்கொண்டு விபத்தில்லா சாலையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

    செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad