Header Ads

  • சற்று முன்

    துபாயில் இருந்து மதுரை வந்த பயணி யிடமிருந்து 617 கிராம் மதிப்புள்ள ரூபாய் 31 லட்சம் மதிப்புள்ள தங்கம் மற்றும் ஐபோனை மதுரை விமான நிலைய சுங்க இலாக நுண்ணறிவு புலானாய்வு பிரிவினர் கைப்பற்றினர்

    துபாயில் இருந்து மதுரை வந்த  பயணி யிடமிருந்து 617 கிராம் மதிப்புள்ள ரூபாய் 31 லட்சம் மதிப்புள்ள தங்கம் மற்றும் ஐபோனை மதுரை விமான நிலைய சுங்க இலாக நுண்ணறிவு புலானாய்வு பிரிவினர் கைப்பற்றினர். துபாயில் இருந்து மதுரைக்கு தினமும் ஸ்பைஸ் ஜெட் விமான சேவை நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில் இன்று காலை 8:20 மணி அளவில் துபாயில் இருந்து மதுரை வந்த ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் 138 பயணிகள் வந்தனர். இதில் பயணம் செய்த தஞ்சாவூர் மாவட்டம்  திருவிடைமருதூர் தாலுகா திருபுவனம் பெருமாள் கோவில் வீதியைச் சேர்ந்த உதயகுமார் என்பவரின் மகன் அவினாஷ் என்ற பயணியிடமிருந்து மறைத்து வைக்கப்பட்ட 348 கிராம் எடையுள்ள நிக்கல் பிளேட் கோட்டிங்குடன் கூடிய வட்டவடிவிலான தங்க பொருளும். இதேபோல் 349 கிராம் எடையுள்ள அலுமினிய காப்பு போல் உள்ள தங்க பொருளும் சுங்க இலாக புலானாய்வு அதிகாரிகள் கைப்பற்றினர். சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த காஜா அலாவுதின் என்பவரிடமிருந்து களிமண்ணால் மறைத்து வைக்கப்பட்ட 617 கிராம் எடையுள்ள  31  லட்சத்து 26 ஆயிரத்து 399ரூபாய் மதிப்புள்ள தங்கம் கைப்பற்றப்பட்டது. மேலும் மறைத்து வைக்கப்பட்ட 90 ஆயிரம் மதிப்புள்ள ஐ போன் கைப்பற்றப்பட்டது. இது குறித்து சுங்க இலாகா நுண்ணறிவு புலானாய்வு பிரிவினர் காஜா அலாவுதினிடம் விசாரணை செய்து வருகின்றனர்.

    செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad