Header Ads

  • சற்று முன்

    மதுரை மாநகர் பேருந்தில் மோதிய இருசக்கர வாகனம்; படுகாயங்களுடன் இளைஞர் மருத்துவமனையில் அனுமதி

    மதுரை எல்லீஸ் நகர் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த வேல்முருகன் (வயது 24) என்பவர் இன்று அதிகாலை பெரியார் பேருந்து நிலையத்தில் இருந்து எல்லீஸ் நகர் பகுதிக்கு இருசக்கர வாகனத்தில் வேகமாக சென்று கொண்டிருந்த போது, எதிரே எல்லீஸ் நகர் பணிமனையில் இருந்து இன்று அதிகாலை புறப்பட்ட மதுரை மாநகர் அரசு பேருந்து பெரியார் பேருந்து நிலையம் அருகேயுள்ள மேம்பாலத்தில் சென்ற நிலையில்  இருசக்கர வாகனம் மோதி விபத்திற்குள்ளானது. இதனால் பேருந்தின் முன்பக்கம் முழுவதும் பலத்த சேதம் ஏற்பட்டது. தொடர்ந்து விபத்தில் சிக்கி படுகாயங்களுடன் இளைஞர் 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad