Header Ads

  • சற்று முன்

    திருச்சுழி அருகே, சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவருக்கு 7 ஆண்டுகள் சிறை.....

    திருவில்லிபுத்தூர் : விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகேயுள்ள தமிழ்பாடி பகுதியைச் சேர்ந்தவர் முருகன் (40). கூலி தொழிலாளியான இவர், கடந்த 2019ம் ஆண்டு, அதே பகுதியைச் சேர்ந்த 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது குறித்து சிறுமியின் பெற்றோர் திருச்சுழி காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். வழக்குபதிவு செய்த போலீசார் முருகனை கைது செய்தனர். இது குறித்த வழக்கு, திருவில்லிபுத்தூர் போக்சோ நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி பூரண ஜெயஆனந்த், குற்றவாளி முருகனுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், 15 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.

    செய்தியாளர் வி காளமேகம்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad