Header Ads

  • சற்று முன்

    தொடர்ந்து திருடு போகும் இருசக்கர வாகனங்கள். காவல் துறை நடவடிக்கை எடுக்க பொது மக்கள் கோரிக்கை.

    வேலூர் மாநகருக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ளது. தென்னை மர தெரு மற்றும் நைனியப்பன் தெரு. இப்பகுதி பல்வேறு விதமான சிறு குறு தொழில் செய்யும் வியாபாரிகள் அதிகம் உள்ள பகுதியாகும். இந்நிலையில் கடந்த சில நாட்களாக இங்குள்ள வியாபாரிகள் மற்றும் கடைகளுக்கு வரும் பொது மக்கள் சாலையில் விட்டுச்செல்லும் இருசக்கர வாகனங்களை அடையாளம் தெரியாத நபர்கள் திருடி செல்வது வாடிக்கையாகி வருகிறது. நேற்று மற்றும் நேற்று முன்தினமும் தொடர்ந்து இரண்டு இருசக்கர வாகனங்களை திருடி சென்றுள்ளனர். இது தவிர மாலையில் நடந்து சென்ற மூதாட்டி ஒருவரிடம் செயின் பறிப்பும் நடந்துள்ளது. இதனால் அப்பகுதி வியாபாரிகள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். மேலும் இருசக்கர வாகறங்களை திருடி செல்லும் நபரின் ஒரு சில சிசிடிவி கேமிரா காட்சிகளும் பதிவாகியுள்ளது. இது குறித்து பாதிக்கப்பட்டோர் வேலூர் தெற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரின் அடிப்படையில் சிசிடிவி காட்சிகளை வைத்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காவல் துறை விரைந்து நடவடிக்கை எடுக்க அப்பைகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad