மதுரை காளவாசல் மேம்பாலம் பகுதியில் மின்விளக்கு எரியாத அவலம்
மதுரை காளவாசல் மேம்பாலத்தில், பெரும்பாலான மின் கம்பங்களில் மின் விளக்குகள் எரியாததால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர் இந்த பாலத்தில் ஆரப்பாளையத்தில் இருந்து விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி ஆகிய பகுதிகளுக்கு செல்லும் கனரக வாகனங்கள், தனியார், அரசு பஸ்கள் என, ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் செல்கின்றன. மேம்பாலத்தின் நடுவே அமைக்கப்பட்டுள்ள, மின் கம்பங்களில் மின் விளக்குகள் பாதி எரிந்தும், எரியாத நிலையிலும் உள்ளன ஒரு சில இடங்களில் மின் கம்பம் மட்டுமே உள்ளதால், குறைவான வெளிச்சம் மட்டுமே உள்ளது. இதனால், அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. மின்விளக்குகள் எரிவதற்கு, சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.செய்தியாளர்
வி காளமேகம் மதுரை மாவட்டம்
கருத்துகள் இல்லை