Header Ads

  • சற்று முன்

    சாத்தூரில், நெஞ்சை உலுக்கும் சோகம்... கணவர் இறந்த 30வது நாளில் மனைவி, மகனுடன் சேர்ந்து தற்கொலை.

    கணவர் இறந்த 30வது நாளில், அவரது மனைவி, மகனுடன் சேர்ந்து விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

    விருதுநகர் மாவட்டம் சாத்தூர், சிதம்பரம் நகர் பகுதியைச் சேர்ந்தவர் சிதம்பரம். இவரது மனைவி சுபா (55). இவர்களுக்கு 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். மகள்களுக்கு திருமணம் முடிந்து தனியாக வசித்து வருகின்றனர். தனியார் வங்கியில் வேலை பார்த்து ஓய்வுபெற்ற சிதம்பரம் தனது மனைவி சுபா, மகன் முரளிபாரதி (28)- யுடன் வசித்து வந்தார். இந்த நிலையில் கடந்த 30 நாட்களுக்கு முன்பு திடீரென்று உடல்நலம் பாதிக்கப்பட்ட சிதம்பரம் இறந்து போனார். சிதம்பரம் இறந்தது முதல் அவரது மனைவியும், மகனும் கடும் சோகத்தில் இருந்து வந்தனர். இன்று சிதம்பரம் இறந்து 30வது நாள். அவரது படத்தை வைத்து வணங்கிய சுபாவும், முரளிபாரதியும் அவரை மறக்க முடியாத நிலையில் விஷத்தை குடித்தனர். அவர்களின் வீடு திறந்து கிடப்பதை பார்த்து அருகில் இருந்தவர்கள் வீட்டுக்குள் சென்ற பார்த்த போது தான் தாயும், மகனும் இறந்து கிடப்பது தெரிந்தது. இது குறித்து சாத்தூர் நகர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து சென்ற போலீசார், விஷம் குடித்து உயிரிழந்து கிடந்த சுபா, முரளிபாரதி உடல்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் சம்பவம் நடந்த வீட்டில் சோதனை செய்த போது தாயும், மகனும் தற்கொலை செய்து கொள்வதாக தனித்தனியாக எழுதி வைத்திருந்த கடிதம் கைப்பற்றப்பட்டது. மேலும் சம்பவம் குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    செய்தியாளர் வி காளமேகம்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad