Header Ads

  • சற்று முன்

    கோவில்பட்டியில் அண்ணா 114 வது பிறந்தநாள் விழா ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது‌.

    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சட்டமன்ற அலுவலகத்தில்  அதிமுக வடக்கு மாவட்டம் சார்பில் முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில்  அண்ணா 114 வது பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாட வேண்டும் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த வேண்டும் மேலும் வரும் 16ஆம் தேதி மின் கட்டண உயர்வை கண்டித்து தேவர் சிலை முன்பு கண்டன  ஆர்ப்பாட்டம் நடைபெறுகின்றன.

    அந்த ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் அனைவரும் கலந்து வேண்டும் வேண்டும் என்று பேசினார். நிகழ்ச்சியில் நகரச் செயலாளர் விஜய பாண்டியன், ஒன்றிய செயலாளர்கள் அய்யாதுரை பாண்டியன், அன்புராஜ்,ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் பழனிசாமி,நகர மன்ற உறுப்பினர்கள்,கவியரசன் வள்ளியம்மாள் மாரியப்பன், செண்பக மூர்த்தி,மாவட்ட அம்மா பேரவை பொருளாளர் வேலுமணி, ஆவின் கூட்டுறவு சங்கத் தலைவர் தாமோதரன், எட்டையாபுரம் நகர செயலாளர் ராஜகுமார்,அம்மா பேரவை ஒன்றிய செயலாளர் சாமி ராஜ்,மாவட்ட வர்த்தக அணி செயலாளர் ராமர், வழக்கறிஞர் அணி மாவட்ட செயலாளர் சிவபெருமான்,அம்மா நகர பேரவை செயலாளர் ஆபிரகாம் அய்யாதுரை, வழக்கறிஞர் அணி சங்கர் கணேஷ், முன்னாள் நகர பொருளாளர் வேல்முருகன்,முன்னாள் ஒன்றிய செயலாளர் போடு சாமி,மேல ஈரால் கிளைச் செயலாளர் பொன்ராஜ், அதிமுக நிர்வாகிகள் அழகர்சாமி, மனோகரன்,பாக்கியராஜ், செந்தில், பழனி குமார், முருகன், கோபி, ஜெயசிங், குழந்தை ராஜ்,உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்‌.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad