Header Ads

  • சற்று முன்

    தொழிற்சாலை வளாகத்தில் படுத்து உறங்கியவடமாநில இளைஞர் மீது ஏறிய லாரி உடல் நசங்கி இளைஞர் உயிரிழப்பு...

    ராணிப்பேட்டை அடுத்த மாந்தாங்கல் பகுதியில் இயங்கி வரும் பெரரா தனியார் தோல் பதனிடும் தொழிற்சாலையில்  ஒப்பந்த அடிப்படையில் இரண்டு வருடங்களாக பணிபுரிந்து வருபவர் வட மாநில இளைஞர் இவர் தொழிற்சாலையில் உள்ளே இருந்த லாரியின் அருகே  படுத்திருந்ததை கவனிக்காத டிரைவர் லாரியை இயக்கிய போது அங்கு படுத்து உறங்கிய பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ராஜாராம் தாஸ் (21) என்பவர்  லாரியின் அடியில் சிக்கி உடல் நசுங்கி உயிரிழந்தார்.

    இது குறித்து தகவல் அறிந்த ராணிப்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி வாலாஜா அரசு தலைமை மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர் மேலும் இந்த சம்பவம் குறித்து ராணிப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் மேலும் தொழிற்சாலையில் வட மாநில இளைஞர் உடல் நசுங்கி உயிரிழந்த சம்பவம் அங்கு பணிபுரியும் தொழிலாளர்களுக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad