Header Ads

  • சற்று முன்

    கோவில்பட்டி அருகே வாத்து முட்டை ஏற்றி வந்த மினி லாரி கவிழ்ந்து விபத்து ரூ 2லட்சம் மதிப்புள்ள வாத்து முட்டைகள் சேதம்


     தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள நாலாட்டின்புதூர் தேசிய நெடுஞ்சாலையில் தஞ்சாவூர் பகுதியில் இருந்து திருவனந்தபுரத்திற்கு மினி லாரி ஒன்று வாத்து முட்டைகளை ஏற்றிக்கொண்டு நேற்று இரவு கிளம்பி உள்ளது. மினி லாரியை கள்ளக்குறிச்சி மாவட்டம் வடமருதூர் கிராமத்தைச் சேர்ந்த மனோஜ் குமார் என்பவர் ஓட்டி வந்துள்ளார். அவருடன் அதே ஊரைச் சேர்ந்த பால்ராஜ் என்பவர் உதவியாளராக வந்துள்ளார். 



    மினி லாரி நாலாட்டின்புத்தூர் தேசிய நெடுஞ்சாலை  உள்ள மேம்பாலத்தில் வந்தபோது திடீரென நிலை தடுமாறி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் சுமார் 2 லட்சம் மதிப்புள்ள 26 ஆயிரம் வாத்து முட்டைகள் சேதம் அடைந்தன. நல்வாய்ப்பாக மினி லாரி டிரைவர் மனோஜ் குமார், அவருடன் வந்த உதவியாளர் பால்ராஜ் இருவருக்கும் எவ்வித காயமும் ஏற்படவில்லை. இந்த விபத்து காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையைடுத்து  போக்குவரத்து சர்வீஸ் சாலை வழியாக திருப்பி விடப்பட்டன. இந்த விபத்து குறித்து நாலாட்டின்புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad