சோழவந்தான் அருகே தானம் கல்வி அறக்கட்டளையின் ஐந்தாவது பட்டமளிப்பு விழா
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே மலைப்பட்டி கிராமத்தில் உள்ள தானம் கல்வி அறக்கட்டளையில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து கல்வி பயின்று வரும் மாணவ மாணவியருக்கான ஐந்தாவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது.
பத்மஸ்ரீ சின்னப்பிள்ளை, ஒச்சம்மாள் ,களஞ்சிய இயக்கத் தலைவிகள், வயலகம் பவுண்டேஷன் தலைவர் பூசாரி தலைமை வகித்தனர். தானம் கல்வி நிலைய தலைவர் வாசிமலை முன்னிலை வகித்தார். கோகலே இன்ஸ்டியூட் ஆப் பாலிடிக்ஸ் அண்ட் எகனாமிக்ஸ் பல்கலைக்கழக துணைவேந்தர் அஜித் கேஸவ ரானடே மாணவ மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார். மும்பையில் இருந்து ராஜஸ்ரீ பிர்லா, ஆதித்யா பிர்லா காணொளி காட்சி மூலம் கலந்து கொண்டனர். விழாவில் அரசு அதிகாரிகள் காவல்துறையினர் மற்றும் பல்வேறு மண்டலங்களைச் சேர்ந்த களஞ்சிய நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர் கல்வி நிலைய இயக்குனர் குருநாதன் நன்றி கூறினார்.
கருத்துகள் இல்லை