விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு கோவில்பட்டியில் அருள்மிகு ஸ்ரீ சக்தி விநாயகர் திருக்கோயிலில் 101 பால்குடம் ஊர்வலத்தை கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ தொடங்கி வைத்தார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கதிர்வேல் நகர் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ சக்தி விநாயகர் திருக்கோயிலில் விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு ஸ்ரீ கருமாரியம்மன் கோயிலில் இருந்து 101 பால்குடம் ஊர்வலம் நடைபெற்றது.
இவ்விழாவில் முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து பால்குடம் ஊர்வலத்தை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் பழனிசாமி, ஒன்றிய செயலாளர் அன்புராஜ், ஆவின் கூட்டுறவு சங்க தலைவர் தாமோதரன், நகர்மன்ற உறுப்பினர் கவியரசன், முன்னாள் ஒன்றிய செயலாளர் போடு சாமி, அதிமுக நிர்வாகிகள் மனோகரன், கோபி, முருகன் பழனி குமார், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை