இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆகஸ்ட் 30தேதி தமிழகம் தழுவிய மறியல் போராட்டம் நடைபெறவுள்ளது
*விலைவாசி உயர்வு *வேலையில்லா திண்டாட்டம் *அக்னி பத் திட்டத்தை கைவிடுதல் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி மோடி அரசை கண்டித்து மாவட்ட தலைநகரில் மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு நடைபெறுகிறது.
அதன் ஒருபகுதியாக செங்கல்பட்டு மாவட்ட தலைநகரில் இயங்க கூடிய இந்தியன் வங்கியை முற்றுகை கட்டுவதற்கான தயாரிப்பு கூட்டம் செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் ஒன்றியம் மெய்யூர் ஊராட்சியில் டாக்டர் அம்பேத்கார் நகர். கன்னியம்மாள் நகர் .இந்திரா நகர். போன்ற கிளைகளில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் செங்கல்பட்டு மாவட்ட செயலாளர் தோழர் ஏ.ராஜ்குமார் மாவட்ட துணை செயலாளர் தோழர் வீராசாமி மாவட்ட குழு உறுப்பினர் #கே.வி.சேகு வாராதாஸ் பங்கேற்று மறியல் போராட்டத்தை விளக்கி பேசினார்கள். .
இதில் கிளை செயலாளர் செ.இன்பராஜ் பிலாப்பூர் தோழர் கி.கதிர்வேல். சிதண்டி மண்டபம் தோழர் வி.முருகன் சம்பாதிநல்லூர் தோழர் மாசிலாமணி இந்திரா நகர், பா.மணிகண்டன் கிளை துணை செயலாளர் எம். நாகராஜ் மற்றும் முன்னணி தோழர்கள் பங்கேற்றனர்
கருத்துகள் இல்லை