Header Ads

  • சற்று முன்

    கோவில்பட்டி கிருஷ்ணா நகர் பகுதியில் 10.ம் ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழா



    கோவில்பட்டி கிருஷ்ணா நகர் பகுதியில் அமைந்துள்ள பிருந்தாவனம் தியான மடத்தில் ஸ்ரீ சந்தான கிருஷ்ணர் கோயில் 10.ம் ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழாவில் முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தார்.


    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கிருஷ்ணா நகர் பகுதியில் அமைந்துள்ள பிருந்தாவனம் தியான மடத்தில் ஸ்ரீ சந்தான கிருஷ்ணர் திருக்கோயில் 10.ம் ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழா முன்னிட்டு சிறப்பு பூஜைகள் சிறப்பு தீபாரணங்கள் மற்றும் குழந்தைகள் கிருஷ்ண வேடம் அணிவித்து மற்றும் கோலாட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது.

    விழாவில் முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து கிருஷ்ண மற்றும் ராதை வேடம் அணிந்த பள்ளி மாணவ மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினார்.நிகழ்ச்சியில் பொதுக் குழு உறுப்பினர் ராமச்சந்திரன் ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் பழனிச்சாமி, ஆவின் கூட்டுறவு சங்க தலைவர் தாமோதரன்,ஒன்றிய செயலாளர் அய்யாதுரை பாண்டியன், நகர மன்ற உறுப்பினர்கள்,கவியரன், செண்பக மூர்த்தி, மாவட்ட வழக்கறிஞர் அணி செயலாளர் சிவபெருமான், மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர் நீலகண்டன், வழக்கறிஞர் அணி சங்கர்கணேஷ், முன்னாள் ஒன்றிய செயலாளர் போடு சாமி, மேல ஈரால் கிளைச் செயலாளர் பொன்ராஜ், அதிமுக நிர்வாகிகள் அழகர்சாமி, மனோகரன், பழனி குமார்,கோபி, முருகன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad