Header Ads

  • சற்று முன்

    ராணிப்­பேட்­டை­யில் கருணாநிதி பிறந்த நாள் விழாவில் அமைச்­சர் ஆர்.காந்தி மாலை அணிவித்து மரியாதை எம்.பி. மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு

    ராணிப்­பேட்டை நகராட்சியில் மக்­க­ளின் தூய்­மைக்­கான மக்­கள் இயக்கத்தினை கைத்­தறி மற்றும் துணிநூல் துறை அமைச்­சர் ஆர்.காந்தி கொடிய­சைத்து துவக்கி வைத்­தார். பின்­னர் மறைந்த முன்­னாள் முதல்­வர் கலைஞர் பிறந்த நாளை­யொட்டி அவரது உருவ படத்­திற்கு மாலை அணிவித்­தார். 

    பின்­னர் நகராட்சி, நகரங்­களில் தூய்­மைக்­கான மக்­கள் இயக்­கம் சார்­பாக இதில் மக்கும் குப்பை தனியாகவும், மக்­காதகுப்பை தனியாகவும் பிரித்து தருவது குறித்து மக்களி­டையே விழிப்­புணர்வு ஏற்­ப­டுத்தும் ஒருவ­கை­யில் என் குப்பை என் பொருப்பு எந்த மக்­க­ளின் சிந்­த­னை­யோடு ஆற்­காடு நகரை சுற்றி விழிப்­புணர்வு நிகழ்ச்சி நடை­பெற்­றது. 

    நிகழ்ச்­சியில் மாவட்டஆட்­சித் தலைவர் பாஸ்­கரபாண்டியன், அரக்­கோ­ணம் நாடாளுமன்ற உறுப்­பினர் ஜெகத்­ரட்­சகன், சட்­ட­மன்ற உறுப்­பினர் ஜே.எல்.ஈஸ்­வரப்­பன், மாநில சுற்றுச்­சூழல் அணி துணை செய­லா­ளர் வினோத் காந்தி, மாவட்டமாணவரணி அமைப்­பா­ளர் வினோத், ஆற்­காடு நகர மன்ற தலைவர் தேவிபென்ஸ் பாண்டியன், நகரமன்ற தலைவர் சுஜாதா வினோத், துணைத் தலைவர் ரமேஷ் கர்ணா மற்றும் நகரமன்ற உறுப்­பினர்­கள் பங்கேற்­ற­னர். மாவட்ட அலுவ­ல­கம்ராணிப்­பேட்டை திமுக  மாவட்டஅலுவ­ல­கத்தில் முன்­னாள் முதல்­வர் கருணா­நிதியின் 99 வது பிறந்த நாள் விழா கொண்­டா­டப்­பட்டது. இதில் கைத்­தறி மற்றும் துணிநூல் துறை அமைச்­சர் ஆர்.காந்தி கலந்து கொண்டு அவரது உருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மாலை அணிவித்து மரி­யாதை செய்து இனிப்பு வழங்­கினார்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad