Header Ads

  • சற்று முன்

    கோவில்பட்டி ஶ்ரீ கண்ணன் திருக்கோயிலில் மகா கும்பாபிஷேக விழா சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ சாமி தரிசனம் செய்தனர்.

    கோவில்பட்டி  ஶ்ரீ கண்ணன் திருக்கோயிலில்  மகா கும்பாபிஷேக விழாவில் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.




    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கோபாலபுரத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ ருக்மணி ஸத்யபாமா சமேத கண்ணபிரான் திருக்கோயிலில் மகா கும்பாபிஷேக விழாவில் ஆழ்வார் திருநகரி - 41வது பட்டம்  ஸ்ரீ மத் பரமஜம்ஸ ரெங்கராமானுஜ ஜீயர் என்ற எம்பெருமானார் ஜீயர் தலைமையில் இன்று திருக்கோயில் அதிகாலை 5.30 மணிக்கு திறக்கப்பட்டு விக்னேஸ்வர பூஜை, சண்முக ஜபம் மற்றும் சிறப்பு பூஜைகளும், கணபதி ஹோமம், தன பூஜை, நவக்கிரக பூஜை, கோ பூஜை, யாகசாலை பூஜைகள் உள்ளிட்டவைகள் நடைபெற்றன. இதனைத் தொடர்ந்து மூலஸ்தானத்தில் 21 அபிஷேக சிறப்பு பூஜைகள், அலங்கார தீபாராதனை நடைபெற்றது. 

    இந்நிகழ்ச்சியில் முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சரும் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜூ, கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதில், பொதுக்குழு உறுப்பினர் ராமச்சந்திரன், ஆவின் கூட்டுறவு சங்க தலைவர் தாமோதரன், மேலஈரால் கிளைச் செயலாளர் பொன்ராஜ், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் பாலமுருகன், அதிமுக நிர்வாகிகள் அழகர்சாமி, முருகன், கார்த்தி, உள்ளிட்ட அப்பகுதி பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.



    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad