கொடுக்கல் வாங்கல் தகராறு பெண்ணிற்கு கத்தி குத்து
ஆறுமுகநேரி பகுதியை சேர்ந்தவர் ராஜா (வயது 35). இவரது மனைவி முத்துசெல்வி (33). இவர்களின் பக்கத்து வீட்டில் வசிப்பவர் மாரியப்பன் (23). இருவருக்குமிடையே கொடுக்கல் வாங்கல் சம்பந்தமாக தகராறு நடந்து விரோதம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று மாலை வீட்டிலிருந்த முத்துசெல்வியிடம் மாரியப்பன் உனது கணவனை எங்கே என்று கேட்டுள்ளார். அதற்கு முத்துசெல்வி, அவர் கடைக்கு சென்றுள்ளார் என்று பதில் கூறியுள்ளார்.
அப்போது ஆத்திரமடைந்த மாரியப்பன் தான் வைத்திருந்த கத்தியால் முத்து செல்வியை குத்தியுள்ளார். கையில் பலத்த காயமடைந்த முத்து செல்வி சத்தம் போட்டுள்ளார். அக்கம் பக்கத்தில் முத்துசெல்வி காயல்பட்டினம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆறுமுகநேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து மாரியப்பனை தேடி வருகின்றன.
கருத்துகள் இல்லை