Header Ads

  • சற்று முன்

    பட வாய்ப்பிற்கு நடிகை மட்டுமல்லாது நடிகையின் தாயை அழைக்கின்றனர் புலம்பும் சின்ன திரை ஸ்ரீ நிதி

    திரையுலகை பொருத்தவரை சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை என இரண்டிலும் அட்ஜஸ்ட்மென்ட் கலாச்சாரம் உள்ளது என்பது தான் நிதர்சனமான உண்மை. பல நடிகைகள் அட்ஜஸ்ட்மென்ட் குறித்து ஓப்பனாக கூறி வருகின்றனர். இந்நிலையில் பிரபல நடிகை ஒருவர் கூறியுள்ள சம்பவம் திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    அதன்படி மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த செந்தூரப்பூவே தொடர் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு பரிச்சயமானவர் தான் சின்னத்திரை நடிகை ஸ்ரீநிதி. கேரளாவை பூர்வீகமாக கொண்ட ஸ்ரீநிதி தமிழ் மட்டுமின்றி மலையாளத்திலும் சீரியல்கள் மற்றும் படங்களில் நடித்துள்ளார்.

    இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற ஸ்ரீநிதி திரையுலகில் தான் சந்தித்த கசப்பான அனுபவங்கள் குறித்து மிகவும் வெளிப்படையாக கூறியிருந்தார். அதன்படி அவர் கூறியதாவது, “நான் பத்தாவது படிக்கும் போது எனக்கு மலையாள படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. 


    நான் என் அம்மாவுடன் தான் படத்தின் ஆடிஷனுக்கு சென்றேன். அங்கே அட்ஜெஸ்ட் செய்ய முடியுமா? என்று கேட்டார்கள். முதலில் அவர்கள் கேட்டது எங்களுக்கு புரியவில்லை. பின்னர் மீண்டும் மீண்டும் அனைத்திலும் அட்ஜெஸ்ட் செய்ய வேண்டும் என்று கேட்டார்கள்.

    நாங்கள் முடியாது என்று கூறினோம். உடனே அவர்கள் மகள் இல்லை என்றாலும் பரவாயில்லை அம்மா கூட ஓகே தான் என்று சொன்னார்கள். இதனால் அதிர்ச்சி அடைந்த நாங்கள் அங்கிருந்து உடனடியாக கிளம்பி விட்டோம்” என கூறியுள்ளார். நடிகைகளை தான் படுக்கைக்கு அழைக்கிறார்கள் என்றால் அவர்களின் அம்மாவையும் விட்டு வைப்பதில்லை போல…

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad