Header Ads

  • சற்று முன்

    பேரறிவாளன் விடுதலைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக காங்கிரஸ் கட்சியினர் அறப்போராட்டம்

    ராஜிவ் காந்தி கொலை குற்றவாளியாக சிறையில் இருந்த பேரறிவாளன் நேற்று விடுதலியானதை தொடர்ந்து அதனை எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தமிழ்நாடு காங்கிரஸ் மாநிலத் தலைவர் கே.எஸ். அழகிரி வாயில் வெள்ளை துணை கட்டிக்கொண்டு அறப்போராட்டம் நடத்த அழைப்பு விடுத்திருந்தார்.

    இதனை முன்னிட்டு சென்னை பெரம்பூர் அம்பேத்கர் சிலை முன்பு இன்று காலை 10.00 மணியளவில் வாயில் வெள்ளை துணியை கட்டிக்கொண்டு காங்கிரஸ் கட்சியினர் அறப்போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் Dr. R.மாணிக்கவாசகம் தலைவர் (ஆராட்சி பிரிவு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி) நிகழ்ச்சி தலைமை டெல்லி பாபு ( தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாவட்ட தலைவர், மாமன்ற உறுப்பினர் ) இமையா கக்கன் (தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி துணைத் தலைவர்) K. சத்தீஷ் ( இளைஞர் காங்கிரஸ் செயலாளர் )அகரம் கோபி (தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிமாநிலத் செயலாளர்) ஹரிபாபு சர்க்கிள் தலைவர், அ. சங்கர், BSNL.ஏகாம்பரம், பட்மேடு குப்பன், மற்றும் திரளான கட்சி தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad