Header Ads

  • சற்று முன்

    திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே தண்ணீர் கம்பெனிக்கு வடமாநில இளைஞர்கள் கைவரிசை

    நாட்றம்பள்ளி அருகே தண்ணீர் கம்பெனிக்கு வடமாநில இளைஞர்களை வேலைக்கு அமர்த்திய முதலாளி! வேலைக்கு சேர்ந்த 15 நாட்களில் பிக்கப்வேன் மற்றும் 2 லட்ச ரூபாய் அபேஸ்! என்னை எந்த போலீசாரும் பிடிக்க முடியாது பீகாருக்கு செல்கிறேன் வாட்ஸ் அப்பில் முதலாளிக்கு அனுப்பிய வீடியோ

    திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த அம்மனாங்கோவில் பகுதியில் சுமார் 15 வருடங்களாக கோபி என்பவர் ஏ.ஆர்.ஜி என்டர்பிரைசஸ் என்ற பெயரில் நிச் மற்றும் டெல்டா என்கிற பெயர்களில் ஆர்.ஓ குடிநீர் விநியோகம் செய்யும் நிறுவனம் இயங்கி வருகிறது. இந்நிலையில் கம்பெனியில் வேலை செய்வதற்கு ஆள் பற்றாக்குறை ஏற்பட்டதால் வேலைக்கு ஆட்கள் தேவை என விளம்பரம் செய்துள்ளார்.

    இதனை அறிந்த வட மாநிலத்தைச் சேர்ந்த மஞ்சித் மற்றும் நிர்மல் எனும் 2  வாலிபர்கள் கடந்த மாதம் 27ஆம் தேதி தங்களுக்கு வேலை வேண்டும் என்று கூறி கோபிக்கு போன் செய்துள்ளனர். இதனைத் தொடர்ந்து கோபியும் அவர்களை அழைத்து அவர்களுடைய ஆதார் அட்டை மற்றும் புகைப்படங்களை தரவேண்டும் என்கிற நிபந்தனையுடன்  வேலைக்கு அமர்த்தியுள்ளார். அதுமட்டுமின்றி தண்ணீர் கம்பெனியிலேயே அவர்கள் தங்க வசதி ஏற்படுத்தி உள்ளார் கோபி ஆனால் இதுவரை அடையாள அட்டை ஆதாரங்களையும் புகைப்படங்களையும் கொடுக்காமல்  இழுத்தடித்த இருவரும் 15தேதி காலை தண்ணீர் கம்பெனியில் இருந்த பிக்கப் வாகனம் மற்றும் இதர வாகனங்களில் இருந்த டீசல் 50 லிட்டர் ரொக்கப் பணம் சுமார் 2 லட்சம் ரூபாய் 50ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள ஸ்டீல் சாமான்கள் ஒரு சிலிண்டர், எல்இடி டிவி என அனைத்து பொருட்களையும்  திருடிக் சென்றுள்ளனர். வழக்கம் போல காலை வேலைக்கு வந்த ஊழியர்கள் கம்பெனியின் சாவி வெளியே வீசப்பட்டு இருந்ததை அறிந்து மேலாளர் கோபிக்கு தெரிவித்துள்ளனர். உடனடியாக கம்பெனிக்கு வந்த கோபி திருடு போன சம்பவம் அறிந்து அதிர்ச்சி அடைந்து நாட்றம்பள்ளி காவல்துறைக்கு தகவல் தெரிவித்து புகார் கொடுத்ததின் அடிப்படையில் நாட்றம்பள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    வேலை தேடி வந்த வடமாநில இளைஞர்கள்   வாகனம் உட்பட சுமார் 13 லட்சம் ரூபாய் திருட்டில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் முதலாளியான கோபிக்கு இன்று நிர்மல் வண்டி ஓட்ட மஞ்சித் வீடியோ எடுத்து நான் பீகாரை நோக்கி செல்கிறேன் என எந்த போலீசாரும் எதுவும் செய்ய முடியாது என்று வீடியோ பதிவு செய்து தனது முதலாளியான கோபிக்கு அனுப்பியுள்ளார் இதன் காரணமாக கோபி செய்வதறியாமல் திகைத்து வருகிறார்  மேலும் வடமாநில இளைஞர்களை  வேலைக்கு அமர்த்தி என்னைப் போல யாரும் ஏமாற வேண்டாம் எனவும் கோபி கோரிக்கை வைத்தார்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad