• சற்று முன்

    கோடை வெயிலை முன்னிட்டு பம்மலில் அதிமுகவினர் தண்ணீர் பந்தல் விநியோகம்



    பம்மலில் அதிமுக பொருளாளர்  அப்பு வெங்கடேசன் தலைமையில் பிரமாண்ட நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்பு

    செங்கல்பட்டு மாவட்டம் சென்னை தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட பம்மல்  பகுதியில்   அதிமுக பம்மல்  நகர பொருளாளர் அப்பு என்கின்ற வெங்கடேசன் தலைமையில் தாம்பரம் மாநகராட்சி  பம்மல் மண்டல அலுவலகத்தின் அருகே பொதுமக்களின் நலன் கருதி வெயிலின் தாக்கம் தற்போது அதிகாரித்து வரும் நிலையில் பொதுமக்களின் தாகத்தை தணிக்கும் வகையில்  நீர், மோர் பந்தல்அமைக்கப்பட்டது.இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக அதிமுகவின்  செங்கல்பட்டு மேற்கு மாவட்ட செயலாளர் சிட்லபாக்கம் ச.ராஜேந்திரன் அவர்கள் கலந்து கொண்டு நீர், மோர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு இளநீர், மோர்,பழரசம் மற்றும் காலை உணவு ஆகியவற்றை பொதுமக்கள் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு வழங்கினார். இதில் பல்லாவரம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ப. தன்சிங், மற்றும் இதில் கட்சியின் நிர்வாகிகள் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad