Header Ads

  • சற்று முன்

    கோவில்பட்டியில் 91வது மாவீரன் பகத்சிங் நினைவு தினத்தை முன்னிட்டு மாவீரன் பகத்சிங் இரத்ததான முகாம் நடைபெற்றது

    கோவில்பட்டியில் 91வது மாவீரன் பகத்சிங் நினைவு தினத்தை முன்னிட்டு மாவீரன் பகத்சிங் இரத்ததான கழகம் அறக்கட்டளை சார்பில் மாபெரும் இரத்ததான முகாம் மற்றும் யோகா & பேச்சுத்திறன் போட்டி நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்தார்.

    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி 91வது மாவீரன் பகத்சிங் நினைவு தினத்தை முன்னிட்டு மாவீரன் பகத்சிங் இரத்ததான கழகம் அறக்கட்டளை சார்பில் மாபெரும் இரத்ததான முகாம் மற்றும் யோகா & பேச்சுத்திறன் போட்டி தனியார் திருமண மண்டபத்தில் வைத்து நடைபெற்றது. மாவீரன் பகத்சிங் ரத்ததான கழக அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர் காளிதாஸ் தலைமையில் மாவீரன் பகத்சிங் ரத்ததான கழக அறக்கட்டளை தலைவர் கிருஷ்ணமூர்த்தி ராஜபாண்டி, மாவீரன் பகத்சிங் ரத்ததான கழக அறக்கட்டளை செயலாளர் சண்முகராஜா, மாவீரன் பகத்சிங் ரத்ததான கழக அரக்கட்டளை பொருளாளர் மணிகண்டன், கருத்துரிமை கூட்டமைப்பு தலைவர் தமிழரசன்,அரசு மருத்துவர் சீனிவாசன், அரசு பொது மருத்துவர் லட்சுமி சித்ரா, முன்னிலையில் சிறப்பு விருந்தினராக முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்து.மாணவ மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.இம்முகாமில் மாநில பொதுக்குழு உறுப்பினர் ராமச்சந்திரன், நகர செயலாளர் விஜயபாண்டியன், ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் பழனிச்சாமி, ஒன்றியச் செயலாளர்கள் அய்யாத்துரை பாண்டியன், அன்புராஜ், ஆவின் கூட்டுறவு சங்க தலைவர் தாமோதரன்,மாநில வழக்கறிஞர் அணி இணைச் செயலாளர் பெஞ்சமின் பிராங்கிளின்,பிரபாகரன் குருதிக்கொடை பாசறை வழக்கறிஞர் ரவிக்குமார், காங்கிரஸ் நகர தலைவர் அருண்குமார்,சமூக ஆர்வலர்கள் சங்கரலிங்கம், செண்பகராஜ்,ராஜேஷ் கண்ணா,வழக்கறிஞர் அணி மாவட்ட செயலாளர் சிவபெருமான், வழக்கறிஞர்கள் சங்கர் கணேஷ்,பார்த்திபன்,பழனி குமார், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் ராமர், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் பாலமுருகன், முன்னாள் ஒன்றிய செயலாளர் போடு சாமி,மாவட்ட மாணவரணி துணை தலைவர் செல்வக்குமார் மாவட்ட மகளிர் அணி செயலாளர் சுதா என்ற சுப்புலட்சுமி, பழனி குமார்,ஆய்வக நுட்பனர் சேவியர், செவிலியர்கள் லட்சுமி காந்தம், சுபா, லட்சுமி, நிர்மலா, உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர்,


    கோவில்பட்டி

    செய்தியாளர் அ‌.சிவராமலிங்கம்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad