சென்னை பழைய வண்ணாரப்பேட்டை செல்வ விநாயகர் கோயில் தெருவில் அமைந்துள்ள அருள்மிகு ஶ்ரீ செல்வ விநாயகர் ஆலயத்தில் ஜீரணோத்தாரண, அஷ்டபந்தன,மஹா கும்பாபிஷேக விழா
சென்னை பழைய வண்ணாரப்பேட்டை செல்வ விநாயகர் கோயில் தெருவில் அமைந்துள்ள 150ஆண்டுகள் பழைமைவாய்ந்த பிரசித்தி பெற்ற அருள்மிகு ஶ்ரீ செல்வ விநாயகர் ஆலயத்தில் ஜீரணோத்தாரண, அஷ்டபந்தன,மஹா கும்பாபிஷேக விழா வெகுவிமர்சயாக நடைபெற்றது. கும்பாபிஷேக விழாவில் யாக வேள்விகள் அமைத்து வேதமந்திரங்கள் ஓதி மங்கள வாத்தியங்களுடன் கோபுர கலசத்திற்க்கு புனிதநீர் ஊற்றபட்டு கும்பாபிஷேகம் வெகுசிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வில் விழா அமைப்பாளர் எம்.பாலசுப்ரமணியன்,,திருநாவுகரசு,ஆலய தர்மகர்த்தாக்கள் ஜே.ராமகிருஷ்ணன்,வி.சுந்தரமூர்த்தி,சரவணன்,சிறப்பு அழைப்பாளராக மிட்டாய் வியாபாரிகள் சங்க தலைவர் கணேசன் மற்றும் H1 காவல் ஆய்வாளர்,உதவி ஆய்வாளர்கள்,பரம்பரை அறங்காவலர்கள் மற்றும் பக்தர்கள் பலர் வருகை தந்து விழாவை சிறப்பித்தனர்.
இதனையடுத்து அருள்மிகு ஶ்ரீ செல்வ விநாயகர் ஆலயத்தில் சிறப்பு அபிஷேக தீப ஆராதனைகள் நடைபெற்றது.விழாவில் பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அன்னதானமும் வழங்கபட்டது.
கருத்துகள் இல்லை