Header Ads

  • சற்று முன்

    முன்னாள் முதல்வர் எம் ஜி ஆர் 105 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு கோவில்பட்டி முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு மலர் மாலை அணிவித்து மரியாதையை செலுத்தினார்




    மறைந்த முன்னாள் முதல்வர் எம் ஜி ராமச்சந்திரன் 105 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு கோவில்பட்டி சட்டமன்ற அலுவகத்தில் அருகே உள்ள மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் திருவுருவச் சிலைக்கு முன்னாள் அமைச்சரும் சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜூ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.


    மறைந்த முன்னாள் முதல்வர் எம் ஜி ராமச்சந்திரன் 105 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சட்டமன்ற அலுவகத்தில் அருகே உள்ள மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் திருவுருவச் சிலைக்கு முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சரும் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினராக கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு எம்ஜிஆரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பொது மக்கள் தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கினார்.



    மேலும் கோவில்பட்டி நகராட்சிக்கு உள்பட்ட 36 வார்டுகளிலும் கட்சியின் கொடியை ஏற்றி எம்ஜிஆரின் திருவுருவப் படத்துக்கு மலர் தூவி மாலை அணிவித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் மற்றும் அன்னதானம் வழங்கினர்.இதனை தொடர்ந்து பள்ளி மாணவ மாணவிகளுக்கு நோட்டு புத்தகத்தை பேனா உள்ளிட்ட வழங்கினார். இதனைத் தொடர்ந்து தோணுகால் மற்றும் பாண்டமங்கலம், பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதியில் கிழக்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜ் தலைமையில் முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கலந்துகொண்டு கட்சிக் கொடியை ஏற்றி எம்ஜிஆரின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி அன்னதானம் பொதுமக்களுக்கு வழங்கினர்.

    இந்நிகழ்ச்சியில் நகரச் செயலாளர் விஜய பாண்டியன்,மாநில பொதுக்குழு உறுப்பினர் ராமச்சந்திரன், ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் பழனிச்சாமி, மாநில எம்ஜிஆர் அணி இணைச் செயலாளர் சீனிராஜ்,மாவட்ட அம்மா பேரவை செயலாளர் செல்வகுமார்,ஒன்றிய செயலாளர்கள் அன்புராஜ்,அய்யாதுரை பாண்டியன், அம்மா பேரவை நகர பொருளாளர் அம்பிகா வேலுமணி,அம்மா பேரவை நகர செயலாளர் ஆபிராம் அய்யாத்துரை, வழக்கறிஞர் அணி மாவட்ட செயலாளர் சிவபெருமாள், நகர தகவல் தொழில்நுட்ப பிரிவு கவியரசன், இளைஞர் இளம்பெண் பாசறை செயலாளர் துறையூர் கணேசன், வர்த்தக அணி மாவட்ட செயலாளர் ராமர், அமைப்பு சாரா ஓட்டுனர் அணி மாவட்ட இணைச்செயலாளர் செண்பக மூர்த்தி, மாவட்ட மாணவரணி துணை தலைவர் செல்வராஜ்,மாவட்ட மகளிர் அணி இணைச் செயலாளர் சுதா என்ற சுப்புலட்சுமி,முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் பாலமுருகன், முன்னாள் கவுன்சிலர்கள் ரவிச்சந்திரன்,ஜெமினி என்ற அருணாச்சலம்,பத்மாவதி, ஆரோக்கியராஜ்,மகேஷ் பாலா,கழகப் பேச்சாளர் பெருமாள்சாமி, மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி இணைச் செயலாளர் போடு சாமி,வழக்கறிஞர் பழனி குமார்,வழக்கறிஞர் சங்கர் கணேஷ்,உள்ளிட்ட வார்டு கிளை செயலாளர்கள் பஞ்சாயத்து தலைவர்கள் அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டு எம்ஜிஆரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad