Header Ads

  • சற்று முன்

    ஆற்றுப்படுகையில் சேற்றில் சிக்கி தவித்த பசு மாட்டை பத்திரமாக மீட்ட தீயணைப்பு துறையினர்


     திருவாடனை இருந்து செங்கமடை செல்லும் வழியில் மணிமுக்தாற்றின் கிளை ஆறு ஓடுகிறது இந்த ஆற்று படுகையில் ஏராளமான மாடுகள் மேய்ச்சலில் இருந்து வந்த நிலையில் ஒரு பசுமாடு தண்ணீர் குடிப்பதற்காக ஆற்றுக்குள் இறங்கி போது ஆற்றுப்படுகையில் சேற்றில் சிக்கியது சிக்கித் தவித்த பசுமாடு வெளிவர முடியாமல் தவித்து வந்த நிலையில் அவ்வழியாக வந்த செங்கமடை கிராமத்தைச் சேர்ந்த வர்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர் தகவலின்பேரில் வந்த தீயணைப்புத் துறை நிலைய ஆவலர் வீராண்டி தலைமையிலான தீ அணைப்பு வீரர்கள் துரிதமாக செயல்பட்டு அந்த பசுமாட்டை பத்திரமாக மீட்டு அனுப்பி வைத்தனர். 

    அந்த பசு மாட்டின் உரிமையாளர் யார் என்று கூட தெரியவில்லை இருந்தும் பசுமாட்டை மனிதநேயத்துடன் மீட்ட தீயணைப்பு துறையினருக்கு சமூக ஆர்வலர்கள் நன்றி தெரிவித்தார்கள்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad