Header Ads

  • சற்று முன்

    மனநலம் பாதிக்கப்பட்டவர்களுடன் விளையாடிய மாநகர காவல் துணை ஆணையாளர் :

    திருநெல்வேலி  மாவட்டம் டவுண் கல்லணை பள்ளியில் உள்ள திருநெல்வேலி மாநகராட்சி சிறப்பு முகாமில் உள்ள மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு மனமாற்றத்தை உருவாக்க பல்வேறு பயிற்சிகளை வழங்கப்பட்டு வருகிறது.

    மேலும் அதன் ஒரு பகுதியாக அவர்களுடன் வாலிபால்  விளையாடிக் கொண்டிருந்த போது முகாமை பார்வையிட வந்த மாநகர காவல் துணை ஆணையாளர் சீனிவாசன் விளையாட்டில் கலந்து கொண்டு இவர்களுடன் சிறிது நேரம் விளையாடினார்..

    பின்னர் அவர்களை உற்சாகப்படுத்தும் நோக்கி தட்டி யாராட்டி மகிழ்வித்தார். மேலும் இந்நிகழ்வில் R-SOYA அமைப்பின் நிர்வாகிகள், உறுப்பினர்கள், மற்றும் தன்னார்வலர்கள், கலந்து கொண்டு சிறப்பித்தனர். அந்த சிலமணி நேரம் ஒரு உயர் அதிகாரி நம்மோடு விளையாடி மகிழ்விக்கிறாரே என  முகாமில் உள்ளவர்கள் அடைந்த ஆனந்தத்திற்கு அளவே இல்லை .காவல் துறையின் உயர் அதிகாரியின் மனிதநேயமிக்க செயலுக்கு தன்னார்வலர்கள் வணங்கி வாழ்த்து தெரிவித்தனர். சாலையோர ஆதரவற்ற மக்கள் இம் முகாமை பயன்படுத்திக் கொள்ள அன்புடன் அழைக்கின்றோம்..

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad