Header Ads

  • சற்று முன்

    திருப்பதி அரசு மருத்துவமனையில் சோகம்.. 11 நோயாளிகள் பரிதாபமாக உயிரிழப்பு

    திருப்பதி அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் 11 நோயாளிகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள திருப்பதி அரசு மருத்துவமனையில் நூற்றுக்கும் மேற்பட்ட நோயாளிகள் ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்தனர். இந்நிலையில் நேற்று இரவு 8 மணி அளவில் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டதாக தெரிகிறது. இதன் காரணமாக 11 நோயாளிகள் உயிரிழந்தனர். மேலும் பல நோயாளிகளின் உடல்நிலை மோசம் அடைந்து, தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டனர். சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக ஆக்சிஜன் விநியோகம் தடைப்பட்டதால் உயிரிழப்பு ஏற்பட்டதாக உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி உத்தரவிட்டு உள்ளார்.



    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad