Header Ads

  • சற்று முன்

    ஜோலார்பேட்டை அருகே கூலி தொழிலாளி வெட்டி படுகொலை!

    திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த அனேரி கிராமம் ராஜமங்கலம் பகுதியைச் சார்ந்த கனகராஜ் மகன் குமரன் (30) இவர் அதே பகுதியை சேர்ந்த மாது மகள் ரம்யா என்ற பெண்ணை மணந்துள்ளார். கருத்து வேறுபாடு காரணமாக 2014 ஆண்டு ரம்யாவை வெட்டி படுகொலை செய்துள்ளார். அதன் பின்பு ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி கிராமம் நேதாஜி நகர் பகுதியைச் சேர்ந்த அஞ்சலி என்பவரை இரண்டாவதாக குமரன் திருமணம் செய்து கொண்டு  அங்கேயே வசித்து வந்துள்ளார். இதன் அடிப்படையில் ரம்யாவின் வழக்கு நாளை தீர்ப்பு வெளியாக உள்ள நிலையில் அவருடைய அண்ணன் ராஜி (30) முகத்தில் கைகுட்டை  கட்டிக்கொண்டு அதிகாலை குமரன் வீட்டிற்கு வந்து தண்ணீர் கேட்பது போல் நடித்து மறைத்து வைத்திருந்த கத்தியால் குமரனை சரமாரியாக வெட்டியுள்ளார்.


    இதனால் குமரன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பலியாகி உள்ளார். சம்பவம் அறிந்து வந்த திருப்பத்தூர் மாவட்ட கண்காணிப்பாளர் விஜயகுமார் தலைமையில் திருப்பத்தூர் துணை காவல் கண்காணிப்பாளர் தங்கவேல் தனிப்படை அமைத்து சுமார் ஒரு மணி நேரத்திலேயே படுகொலை செய்த ராஜீவை கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது


    எமது செய்தியாளர் : நித்தியானந்தம் 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad