Header Ads

  • சற்று முன்

    அனகாபுத்தூரில் எம்ஜிஆர் இளைஞர் அணி சார்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது

    செங்கல்பட்டு மாவட்டம்  சென்னை பல்லாவரம் அடுத்த அனகாபுத்தூரில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் செல்வி.ஜெ.ஜெயலலிதா அவர்களின் 73வது பிறந்தநாளை முன்னிட்டு அனகாபுத்தூர் நகர எம்ஜிஆர் இளைஞர் அணி சார்பில் நகர இளைஞரணி செயலாளர்  C.ஜெய் கணேஷ் அவர்கள்  தலைமையில் ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது .இதில் சிறப்பு அழைப்பாளராக  மாவட்ட கழக செயலாளர் சிட்லபாக்கம் ச.ராஜேந்திரன் அவர்கள் கலந்து கொண்டு ஜெயலலிதா அவர்களின் திருவுருவ படத்திற்கு   மலர் தூவி  மறியாதை செலுத்தி பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதில்  முன்னாள் பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினரும் பல்லாவரம் நகர கழக செயலாளருமான ப.தன்சிங் ,முன்னாள் நகரமன்ற தலைவரும், மாவட்ட அம்மா பேரவை தலைவருமான அனகை.B.வேலாயுதம் நகர கழக செயலாளர் B.V.ராஜா துரைபாபு, மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞர் அணி செயலாளர் G.S.புருஷோத்தமன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் ப.காசிராஜன் மற்றும் கழக நிர்வாகிகள் பொதுமக்கள் என ஏராளமானோர்  கலந்து கொண்டனர்.

    பல்லாவரம் தொகுதி செய்தியாளர் ச.ராஜ்கமல்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad